கேரளாவில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு பசியாற்றிட ஒவ்வொரு நாளும் பல குடும்பங்கள் கொஞ்சம் கூடுதலாக சமைத்து உணவை அனுப்பி வைக்கின்றன. வழக்கத்திற்கு மாறாக, இந்த திட்டத்தை சாதாரண மக்கள்தான் நடத்துகின்றனர். உணவை கொண்டு சேர்க்கும் பணியை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஆயிரக் கணக்கான தோழர்கள் நிறைவேற்றுகின்றனர்.
அம்பல மேட்டில் தனது வீட்டிற்கு அருகே உள்ள சிறிய குளத்திலிருந்து துளசி என்ற பெண்மணி 20 மீன்களை வலை வீசி பிடிக்கிறார். தனது குடும்பத் தேவைக்கு போக மீதம் உள்ளதை அண்டை வீட்டாருடன் பகிர்ந்து அளிக்கிறார். மறுநாள் காலையில் அவரது தாயார் லீலா வர் கிஸ் சில கூடுதல் கப் சாதம் வேக வைக்கிறார். மீன் வருவல், ஆம்லெட் தயார் செய்கிறார். குடும்பத் தேவைக்கு போக மீதம் உள்ளதை பார்சல் செய்கிறார். காலை 9 மணிக்கு அந்த கூடுதல் உணவை பொதிச் சோறை சேகரித்துச் செல்ல வாலிபர் சங்கம் உறுப்பினர்கள் வரும்பொழுது வாழை இலை பொட்டலத்தில் கட்டி தயாராக வைக்கிறார்.
ஆறு ஆண்டுகளுக்கு முன் திருவனந்த புரத்தில் 200 உணவுப் பொட்டலங்களுடன் ஆரம்பித்தது தற்போது கேரளாவின் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களுக்காக ஒரு நாளைக்கு 45 ஆயிரம் பொதுச் சோறு பொட்ட லங்களாக விரிவடைந்துள்ளது என வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் வி கே சனோஜ் கூறுகிறார். நாங்கள் மொத்தம் 6.5 கோடி உணவுப் பொட்டலங்களை டெலிவரி செய்துள் ளோம் என பெருமை பொங்க குறிப்பிடுகிறார்.
கூடுதலாக கொஞ்சம்!
கொச்சியில் மட்டஞ்சேரியில் உள்ள மஞ்சு சாலிக் தங்கள் பிள்ளைகள் பள்ளிக்கு கிளம்பும் முன் எவ்வளவு சவால்கள் இருந்தா லும் ஐந்து கூடுதல் பார்சல் தயாரிக்கிறார். மீன் அல்லது முட்டையுடன் கூடிய கறி என்பதை எப்படியாவது உறுதி செய்கிறார்.வருவோர் யார் என்பது தெரியாது. யாராக இருந்தாலும் அவர்கள் எங்கள் குடும்பத்தை போன்றவர்கள். நாங்கள் ஒரே உணர்வை பகிர்ந்து கொள்கிறோம் என்கிறார் மஞ்சுவின் கணவர் சாலிக் ஜமான்.
செலவு ஒன்றுமில்லை!
சமையலர்களைப் பணியமர்த்துவது, சமையலறையை பராமரிப்பது, விலை உயர்ந்த பேக்கிங் பொருளை பயன்படுத்து வது என்பதெல்லாம் இதில் இல்லை. கேர ளாவில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சிபிஎம் கட்சியால் ஆண்டுதோறும் இதற்கான காலண்டர்கள் திட்டமிடப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு குறிப்பிட்ட நாள் பார்சல்களை சேகரித்து உள்ளூர் அரசாங்க மருத்துவமனைக்கு வழங்கப்படு கிறது. சமைப்பதற்கும் பார்சல் சேகரிப்பதற் கும் இரண்டு நாட்களுக்கு முன் நினைவூட்டல் செய்தியை மட்டும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்புவார்கள்.
வாழ்க்கையின் அனைத்து பயணங்களிலும்!
ஒவ்வொரு யூனிட்டும் ஆண்டிற்கு இரண்டு முறை மட்டுமே கடமையை பெறும் வகையில் சமைப்பவர்களுக்கும் வேலை சுமை ஏற்படாதவாறு காலண்டர் உருவாக்கப்படு கிறது. இந்த திட்டத்தை பொறுத்தவரை ஜாதி, மதம், அல்லது அரசியல் கட்சி பேதம் இல்லை. அனைத்து தரப்பு மக்களும் பங்களிப்பு செய்கிறார்கள் என்கிறார் சனோஜ்.
எர்ணாகுளம் அரசு மருத்துவக் கல்லூரி யில் நோயாளிகள் பார்வையாளர்கள் தவிர செவிலியர்கள், அட்டண்டர்கள், மாணவர்கள், ஓட்டுநர்கள், பாதுகாப்பு ஊழியர்கள் என பலரும் இந்த பொதுச்சோற்றை நம்பி உள்ளார்கள்.
மட்டன்சேரியில் உள்ள வாலிபர் சங்க கூவ பாடம் கிழக்கு பிரிவில் அக்கம் பக்கத்தினர் 15 பேர் ஒன்று சேர்ந்து அருகில் உள்ள ஒரு கோவிலில் பாத்திரங்களை கடன் வாங்கி எர்ணாகுளம் மருத்துவக் கல்லூரிக்கு 250 சைவ பொட்டலங்களையும் தயார் செய்கின்ற னர். பார்சலை பெறுபவர்கள் ஆசீர்வதிக்கும் போது ஏற்படும் உணர்வை விளக்க வார்த்தைகள் இல்லை.
உணவகங்களிலிருந்து உணவைப் பெறுவது கட்டுபடியாகாத பலருக்கு இந்த பொதிச்சோறு பார்சல் பெரும் நிவாரண மாகும். என் கணவருக்கு காசநோய் 17 நாட்களாக மருத்துவமனையில் உள்ளேன். எங்களுக்கு பொதுச் சோறு கிடைக்கிறது. இதற்காக எங்கள் நன்றியை எப்படி நான் தெரிவிப்பது? என்று வீட்டு வேலை செய்யும் 73 வயது பெண்மணி ஏஞ்சல் தாமஸ் உணர்ச்சி பொங்க குறிப்பிடுகிறார்.
மக்களை நேசிக்கும் மனித நேயம் செயல்வாட்டுக்கான அரசியல் உறுதி இரண்டும் தான் பொது சோறு பொட்டலங் களை தேவையானவர்களுக்கு கொண்டு சேர்க்கிறது.”பொதிச் சோறு” கேரள மாடலின் மற்றொரு உன்னத அம்சம்.